சென்னை: 2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி 3ந்தேதி தொடங்குவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கந்தர்வகோட்டை ஒன்றியம், தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல்ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு 3ந்தேதி அங்கு போட்டி நடைபெறுகிறது.
கடந்த ஆண்டும் தச்சங்குறிச்சியில் முதல் போட்டி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டும், அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால், மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், விழாக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, வாடிவாசலுக்கான முன் ஏற்பாடுகளை புதுக்கோட்டை கலெக்டர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஜல்லிக்கட்டு காளைகள் செல்லும் இருபுறம் தடுப்புகள், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடையும், ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்படுகளை விழா குழுவினர், உள்ளுர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில், 2028ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது, வழக்கம் போல தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.