குவைத் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதான் அந்நாட்டின் முதல் உயிரிழப்பு. உயிரிழந்துள்ள நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா குவைத் நாட்டிலும் பரவியுள்ளது. அங்கு 24 இந்தியர்கள் உள்பட 317 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 1ந்தேதி முதல் 30ந்தேதி வரை ,  28 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை மொதத்தம்  317 பேர் கொரோனா தொற்று அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உயிரிழந்துள்ள நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு வயது 46 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.