பின்லாந்து பிரதமர் சன்னா மரின்  தனது காதலியான மார்கஸ் ரெய்கோனனை 16ஆண்டு களுக்கு பிறகு  திருமணம் செய்து கொண்டார்.

உலகின் இளம் பிரதமராக இருப்பவர் பின்லாந்து பிரதமர் சன்னா மரின். அவருக்கும்,  அவரது நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனும் திருமணம் நடைபெற்றது.

43வயதான பின்லாந்து பிரதமர்  தனது காதலியான மார்கஸ் ரெய்கோனனை,  பிரதமரின்  அதிகாரப்பூர்வ இல்லமான கெசராண்டாவில் மணந்ததாக பின்லாந்து அரசாங்கம் டிவீட் செய்துள்ளது.

16 ஆண்டுகளாக இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிகளக்கு  இரண்டரை வயது மகள் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, தம்பதியரின் குடும்ப நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியான தம்பதியரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மரின், தான் விரும்பும் நபருடன் தனது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதில் தான் மகிழ்ச்சியும் நன்றியுடனும் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.