சென்னை: தனது அலவலகத்தில் பணியாற்றி வந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்தகொண்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி என்ற 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் மேலும் பல பெண்களிடம் தவறான நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில், பிரபல போதைபொருள் கடத்தல் மன்னன் ஜாபர் ஜாதிக் கைது செய்யப்பட்டது முதல், அவர் போதை பொருள் விற்பனை மூலம்  கிடைத்த பணத்தைக்கொண்டு, படத்தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்திய, படம் தயாரித்து வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான விசாரயைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சினிமான தயாரிப்பாளர்  முகமது அலி என்பவர் இளம்பெண்களிடம் பாலியல் சேட்டை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை, கொளத்தூர் பகுதியை சேர்ந்த முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. இவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த இளம்பெண்ணுக்கு குடித்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கெடுத்து, அவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது, இளம் பெண் ஒருவர் கடந்த மே மாதம் 13ம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறி தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கெடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்திருப்பதாகவும் புகாரில் தெரிவித்தார்.

இதனால் தான் கர்ப்பம் அடைந்த நிலையில், சத்து மாத்திரைகள் என கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவினை கலைத்ததாகவும் தனது புகாரில் இந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும் கருக்கலைப்பு குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும், தன்னிடம் தவறாக நடந்துகொண்ட போது பதிவு செய்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டி தன்னிடம் இருந்து ரூ.5லட்சம் வரை பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதா, இளம் பெண் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்
அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், சினிமா தயாரிப்பாளரான முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி
புழல் சிறையில் அடைத்தனர்.

முகமது அலி இதுபோன்று சினிமா தயாரிப்பு, நடிக்க வாய்ப்பு என்ற ஆசைக்காட்டி, என்ற பெயரில் பல பெண்களிடம் தவறாக நடந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்து இதுவரை யாரும் புகார் அளிக்காத நிலையில், காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.