சென்னை
நேற்று வெளியான தக்லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது/

‘தக் லைப்’ படம் ரிலீஸாவதற்கு 2 நாட்கள் முன்பாக, தயாரிப்பாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டு அதில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘தக் லைப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் ‘தக் லைப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ‘
தக் லைப்’ படத்தை இணையத்தில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘ ‘தக் லைப்’ பட தயாரிப்பு நிறுவனம் தொடந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘தக் லைப்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் லீக்காகி இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், படம் இணையத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி ‘தக் லைப்’ படம் இணையதளங்களில் லீக்காகி இருக்கிறது. இணையதளங்களில் லீக்கான படத்தை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.