சென்னை:
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும், அற்புதமான, வரலாற்று தருணத்தை காணப் போகிறோம். சுதந்திர தினத்தை முன்னிட்டு 24 மாநிலங்களில், 75 முக்கிய ரயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது என்று தெரிவித்தார்.