சென்னை:
காவிரி பிரச்சினையில், தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தை அனைத்து விவாசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், காவிரியில் கர்நாடக தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
உண்ணாவிரதம் அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்
Patrikai.com official YouTube Channel