மருத்துவ சீட்டு மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம்.குழுமத்தலைவர் பச்சமுத்து எனும் பாரிவேந்தர் இன்று கைது செய்யப்பட்டார். அவரை சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு அழைத்து வந்தபோது அவரது ஆதரவாளர்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

a
அவர்கள் சன்குழுமம் மற்றும் டாக்டர்.ராமதாசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதன் பிறகு எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் வழக்கறிஞர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
நீதிமன்றத்தில் உண்மையை நிரூபித்து பச்சமுத்து வெளியில் வருவார். அவர், பச்சமுத்து சட்டத்தை மதித்து நடப்பவர். , அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று வெங்கடேசன் தெரிவித்தார்.