பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் கடந்த 6 மாதங்களில் சுகுமார் 3 லட்சம் போலி கணக்கு களை நீக்கி உள்ளதாக தெரிவித்துஉள்ளது.

‘கடந்த அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டதை கண்டறிந்ததும்,  சில நிமிடங்களில்அதை  நீக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது. இது முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலி கணக்குகளை விட இரு மடங்கு அதிகம் என்றும் பேஸ்புக் தெரவித்துள்ளது.

மேலும், நாள்தோறும்  லட்சக்கணக்கான போலி கணக்குகள் உருவாக்கப்படுவதால் அவற்றை கண்டறிய முடியாத நிலை நீடித்து வருவதாகவும், அவரை இயன்ற அளவு தடுத்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும்,  கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகை யிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 லட்சம் அதிகம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

-removed–in-last-six-months