நியூயார்க்: பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது பேஸ்புக் தான். உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர், பேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு வருவாய் ஆதாரங்கள் மூலம் பில்லியன் டாலர் கணக்கில் வருவாயை ஈட்டுகிறது பேஸ்புக். ஆனால், சமீபத்தில்  பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை வேறு நிறுவனத்துக்கு விற்றதாக புகார் எழுந்தது. இதை பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.

பேஸ்புக் நிறுவனம் தனது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் கவனக்குறைவாக இருந்ததால், அந்த நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. ஆனாலும் பேஸ்புக் நிறுவனம்  இந்த சர்ச்சைகள், அதன் வருவாயை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் காலாண்டு வருவாய்  49 சதவீதம் அதிகரித்து 12 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.  நிகர இலாபம் 65 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது.

பேஸ்புக் நிறுவனத்தின், சிஇஒ மார்க் சூகர்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு முக்கிய சவால்களை கடந்து, நமது நிறுவனம் 2018 ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது”என்று தெரிவித்து இருக்கிறார்.