ஓவர் சரக்கு உடம்புக்கு ஆகாது என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான் என்று பிரிட்டனில் நடைபெற்ற சம்பவம் உணர்த்தியுள்ளது.

இங்கிலாந்தின் பிளைமவுத் பகுதியைச் சேர்ந்த கோகோ என்ற இரண்டு வயது நாய்க்கு குடிப்பழக்கத்தை நிறுத்த சிகிச்சை தேவைப்பட்டது.

அதற்காக போதை மறுவாழ்வு மையத்திற்கு அந்த லாப்ரடார் வகை நாய் அழைத்துவரப்பட்டது.

கோகோ என்று பெயரிடப்பட்ட அந்த நாயை வளர்த்தவர் தினமும் மது அருந்தக் கூடியவர். இரவில் குடித்துவிட்டு ஒரு கிளாஸ் மதுவுடன் தூங்குவது அவரின் பழக்கமாகவும் இருந்தது.

கிளாஸில் இருக்கும் மதுவை அவர் அருகில் அமர்ந்து குடிப்பதன் மூலம் கோகோ-வுக்கு மது அருந்தும் பழக்கம் துவங்கியது.

அதே வீட்டில் மற்றொரு நாயும் இதேபோல் மதுப்பழக்கத்திற்கு ஆளானது. ஒருநாள் திடீரென அதை வளர்த்தவர் இறந்துவிட்டார் இதனால் அந்த இரண்டு குடிகார நாய்களும் ஆதரவின்றி இருந்தது.

பிரிட்டனின் உட்சைட் அனிமல் வெல்ஃபேர் டிரஸ்ட் இந்த அனாதை நாய்களை எடுத்துச் செல்ல முன் வந்தது. கோகோவுடன் எடுத்துச் செல்லப்பட்ட மற்றொரு நாய் இறந்து போனது.

இதனை அடுத்து இந்த இரண்டு நாய்களுக்கும் குடிப்பழக்கம் இருப்பதை அந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குடிப்பழக்கத்தை நிறுத்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட கோகோ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.

அங்கு அந்த நாய் குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர 4 வாரங்கள் மயக்கம் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.