ராச்சி

முன்னாள் பாக் கிரிக்கெட் வீரர் ஆமிர் ஹனிஃப் மகன் பாக் ஜூனியர் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாததால் துக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆமிர் ஹனிஃப்.  இவர் மகன் முகமது சர்யாப்.   இவர் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.   இவர் கராச்சி ஜூனியர் கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார்.   விளையாட்டின்  போது இவருக்கு காயம் ஏற்பட்டதால் இவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.   முகமது வெளியேற மறுத்துள்ளார்.

அமிர் – முகமது

அப்போது தேர்வாளர்கள் இவர் குணமாகி வந்ததும் மீண்டும் வாய்ப்பு அளிப்பதாக கூறி உள்ளனர்.   அதன் படி இவர் மீண்டும் அணுகிய போது தேர்வாளர்கல் இவருக்கு வயதாகி விட்டதாக கூறிவிட்டனர் அதனால் இவர் அணியில் சேர்க்கப் படவில்லை.

இதனால் மனம் உடைந்த முகமது சர்யாப் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.    இது குறித்து அவர் தனதை ஹனிஃப், “என் மகன் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களின் நடவடிக்கையால் தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.   மற்ற வீரர்கள் மகன்கள் யாருக்கும் இது போல நடைபெறக்கூடாது என வேண்டிக் கொள்கிறேன்:  எனத் தெரிவித்துள்ளார்.