லண்டன்:

மிழர்களால் பெருமை அடைகிறோம்  என்று இங்கிலாந்து பிரதமர் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் திருநாளை கொண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில்  அரசியல் தலைவர்கள் பலர்  பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தெரசா மே தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “வணக்கம்” என்று தமிழில் தெரிவித்துவிட்டு பிறகு பேசுகிறார்.

“இங்கிலாந்து மற்றும் உலக முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். தமிழர்கள் இங்கிலாந்து வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியுள்ளனர். தமிழர்களால் தாங்கள் பெருமைப்படுகிறோம். வரும் ஆண்டு அவர்களுக்கு சிறப்பாக அமையட்டும்” என்று தெரசா தெரிவித்துள்ளார்.