சென்னை:  பொறியியல் கலந்தாய்வில் தற்காலிக கல்லூரி ஒதுக்கீடு பெற்ற 63 ஆயிரத்து 843  மாணாக்கர்களுக்கு நாளை கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நடந்து வருகிறது.  ஏற்கனவே இரண்டு சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில்,  3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நாளை நாளை (ஆகஸ்டு 28ந்தேதி)   காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை  நடைபெற்றது. இதில்,  2 லட்சத்து 48 ஆயிரத்து 848 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.  அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாயவுகள் நடைபெற்றுள்ளன.

இந்த கலந்தாய்வில்,  பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர். இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்களில் பொதுப் பிரிவில் 58 ஆயிரத்து 889 பேர், 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4 ஆயிரத்து 954 பேர் என மொத்தம் 63 ஆயிரத்து 843 பேருக்கு நேற்று காலை 10.30 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை உறுதி செய்ய அவர்களுக்கு இன்று மாலை 5.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு நாளை காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.