சென்னை: இங்கிலாந்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில், முதல்நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 300 ரன்களைச் சேர்த்துள்ளது.

3வது செஷன் ஆட்டம் துவங்கும்வரை, வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த இந்தியா, அடுத்த 18 ஓவர்களில் மேலும் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிட்டது.

இரட்டைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா 161 ரன்னுக்கும், சதமடிப்பார் என்று நினைக்கப்பட்ட ரஹானே 67 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். அஸ்வினும் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

தற்போது ரிஷப் பன்ட் 33 ரன்களுடனும், அக்சர் படேல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்றைய ஆட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 88 ஓவர்கள் மொத்தமாக வீசிய இங்கிலாந்து தரப்பில் 1 ரன்கள்கூட கூடுதலாக விட்டுத்தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய ஆட்டத்தில், இந்தியா இன்னும் 50 ரன்களை கூடுதலாக சேர்த்தால், இங்கிலாநது அணிக்கு சவாலாக இருக்கும்.