நியூயார்க்:
டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை கடந்த சில வாரங்களுக்கு முன் வாங்கினார். கடந்த 9ம் தேதி, டுவிட்டர் இயக்குனர் குழுவில் எலான் மஸ்க் இணைவதாக இருந்தது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2% பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்தார். இதன்படி தற்போது ட்விட்டரில் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் உள்ளார். இதையடுத்து அவரை ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இறுதியில் ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இடம் வேண்டாம் என எலான் மஸ்க் நிராகரித்துவிட்டார். இதன்பின்பு ட்விட்டர் நிறுவனத்தையே விலைக்கு வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் தெரிவித்தார். இது ட்விட்டர் நிர்வாக உறுப்பினர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும், ட்விட்டர் நிறுவனம் தன் கையில் வந்தால் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என எலான் மஸ்க் தெரிவித்தார். இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

கடந்த 14ம் தேதியன்று எலான் மஸ்க், ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலையில், அதாவது, கிட்டத்தட்ட 3.31 லட்சம் கோடி ரூபாய்க்கு டுவிட்டரை வாங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். டுவிட்டர் நிறுவனத்துடன் முதல் கட்ட பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து , ரு. 4,200 ஆயிரம் கோடிக்கு (44 பில்லியன் டாலருக்கு ) டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டுவிட்டரை எலன் மஸ்க் முழுமையாக வாங்கியதால், பங்கு சந்தையில் டுவிட்டரின் விலை 3 லட்சம் கோடி வரை உயர்ந்தாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.