லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு புலம்பெயர்ந்த 8 மருத்துவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரெக்சிட் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றால் சிக்குண்ட இங்கிலாந்தில் , எகிப்து, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 மருத்துவர்களின் மரணம் ஆரோக்கியத்தின் அசாதாரண நிலையை உறுதிப்படுத்தி இருக்கிறது.

பிரிட்டிஷ் மருத்துவர்கள் பெருமளவில் குறிப்பாக மருத்துவ துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் வெளிநாட்டு மருத்துவர்களும் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

இந் நிலையில் தான் 8 மருத்துவர்கள் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி இருக்கின்றனர். இறந்த ஒருவரான அடில் எல்தயார் என்பவரின் உறவினரும், மருத்துவருமான ஹிஷாம் எல்-கிதிர் கூறி இருப்பதாவது:

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, அவர்கள் பிரெக்ஸிட்டை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். எங்களை போன்ற குடியேறியவர்கள் நம் நாட்டிற்குள் வந்து தங்கள் வேலைகளை பறிப்பதாக நினைத்தனர்.

ஆனால் இப்போது, ​​அதே குடியேறிகள்தான் உள்ளூர் மக்களுடன் இணைந்து மருத்துவ சேவயாற்ற முயற்சிக்கிறார்கள் என்றார். முன்னதாக கொரோனா வைரஸிலிருந்து பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் 7,097 பேர் இறந்து விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.