காபூல்:
ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 14  பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த குண்டு வெடிப்பு நகர பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-க்கு அதிகமாக இருக்கலாம் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.