பெகிரா, எகிப்து

கிப்து நாட்டில் ஒரு பயணிகள் ரெயில் விபத்துக்குள்ளாகி 15 பேர் மரணமும் 40 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டுள்ளது

எகிப்து நாட்டில் சமீபகாலமாக ரெயில் விபத்துகள் அதிகரித்து வருகின்ரன.  கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்தில் 40 பேர் மரணம் அடைந்தனர்.   இந்த விபத்து ஆகஸ்ட் மாதம் நடந்தது.   இது முடிந்து தற்போது மீண்டும் ஒரு பெரிய பயணிகள் ரெயில் விபத்து நடந்துள்ளது.

எகிப்தின் பெகிரா மாநிலத்தில் நேற்று இரவு வேகமாக சென்றுக் கொண்டிருந்த ஒரு பயணிகள் ரெயிலில் இருந்து இரு பெட்டிகள் தனியாக கழன்றன.   கழன்ற இந்த ரெயில் பெட்டிகள் சரக்கு ரெயில் மீது மோதி உள்ளது.   இந்த விபத்தில் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.   விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.