டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை குணமடைந்து, பணியாற்றி வந்த நிலையில், இன்று திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால்,  டெல்வலியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல்  அரசியல்வாதிகள், சினிமா துறையினர், பொதுமக்கள்  என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் கடந்த ஏப்ரல் 21ந்தேதி  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில், அவரது உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு பிறகான பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.