சென்னை:
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மதியம் 12:45 மணியளவில் தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்து பேச உள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் திமுக அமைச்சரும் மீதான ஊழல் குறித்து ஆளுநரிடம் பேச உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஏற்கனவே ஆளுநரிடம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel