நியூயார்க்:
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், போலீசாரால் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் உள்ள பிரபல கடைகள், ஷாப்பிங் மால்கள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்து பொருட்கள் சூறையாடபபட்டு செல்லும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு பிரபல பல நகைக் கடை கொள்ளையடிக்கப்பட்டது . அந்த கடை அங்குள்ள 47 வது தெருவில் உள்ள பிரபலமான வைர நகைக்கடை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற வன்முறைகளை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 25ஆம் தேதி போலி 20 டாலர் நோட்டை ஜார்ஜ் ஃபிளாய்ட் கொடுத்ததாக கடைக் காரர் ஒருவர் போலிசாருக்குத் தகவல் கொடுத்ததால் அங்கு வந்த போலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அப்போது ஜார்ஜ் ஃபிளாய்டின் கழுத்து மேல் போலிஸ்காரர் ஒருவர் முட்டிக்காலை வைத்து அழுத்திப் பிடித்திருந்தார். ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுவிட முடியவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியும் போலிசார் அழுத்திய காலை எடுக்காததால் அவர் மரண மடைந்தார்.
இந்தச் சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் கலவரம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு தலைவர்கள் டிரம்ப் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் கலவரங்களைக் கட்டுப்படுத்த நாற் பது நகரங்களில் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. போலிஸ் கார்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தை போலிசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், தலை நகர் வாஷிங்டன் உட்பட 15க்கும் மேற்பட்ட நகரங்களில் 5,000 பேருக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கொரோனாவால் மிக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, தற்போது இனக்கலவரத்தால் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது.