சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக  10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, சனி,ஞாயிறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கவே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 10ந்தேதி திங்கட்கிழமை முதல் 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளதால், ஞாயிறு கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும்.  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.