சென்னை: பழைய சோறு தினமும் சாப்பிட்டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம் என்றும், குறை பிரசவத்தையும் தவிர்க்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவர் ஜெஷ்வந்த் தீவிர முயற்சியின் காரணமாக பழைய சோறு பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

- பழைய சோறில் பல்வேறு சத்துக்களும் நல்ல பாக்டீரியாக்களும் நுண்சத்துக்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- தினமும் பழைய சோறு சாப்பிடுவதால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
- குடலின் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
- கர்ப்பிணிகள் பழைய சோறு சாப்பிடுவதால் குழந்தை நன்றாக வளர்கிறது.
- குறை பிரசவம், கர்ப்பகால நீரிழிவு, அதிக உயர் ரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது.
- இதய நோயிலிருந்து காப்பாற்றுகிறது. ரத்த கொழுப்பு அளவுகளை குறைக்கிறது.
- கல்லீரலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் மற்றும் ஆபத்தான அமிலங்களை கல்லீரலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
- அதிக வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு குடலில் ஓர் அரணாக இருந்து நுண்சத்துக்கள் மற்றும் நீர்ச் சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாக்கிறது.
- வயிற்று வலி, மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற நோய்களிலிருந்து குணமாக உதவுகிறது.
- உடல் நலத்துக்கு பாதுகாப்பான மிகச்சிறந்த உணவாக பழைய சோறு இருக்கிறது.
பழைய சோறு தினம் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலாநிதி வீராசாமி எம்.பி., ஐட்ரீம் இரா.மூர்த்தி எம்எல்ஏ, சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜோதிகுமார், ஆர்எம்ஓ வனிதா மலர், குடல் அறுவை சிகிச்சை பிரிவு இயக்குநர் ஜெஸ்வந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பழைய சாதம் தொடர்பான ஆராய்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், அதன்மூலம் பயன்பெற்ற பயனாளிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், தமிழக பாரம்பரிய உணவான பழைய சோறினால் மனித உடலில் ஏற்படும் மகத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அந்த ஆய்வில் சர்க்கரை நோய், புற்றுநோய், பேறுகால பாதிப்புகளை தடுக்கும் 200 வகையான நன்மைகள் பழைய சோறு நீரில் இருப்பது ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதயம், சிறுநீரகம், கல்லீரல் நலனைக் காக்கிறது. மொத்தம் 55 நோயாளிகளிடம் பழைய சோறு நீரை வழங்கி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வயிறு சார்ந்த பாதிப்புகள் அவர்களுக்கு குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறது ஸ்டான்லி மருத்துவமனையின் ஆய்வு.
சம்பந்தப்பட்ட அந்த ஆய்வில் சர்க்கரை நோய், புற்றுநோய், பேறுகால பாதிப்புகளை தடுக்கும் 200 வகையான நன்மைகள் பழைய சோறு நீரில் இருப்பது ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதயம், சிறுநீரகம், கல்லீரல் நலனைக் காக்கிறது. மொத்தம் 55 நோயாளிகளிடம் பழைய சோறு நீரை வழங்கி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வயிறு சார்ந்த பாதிப்புகள் அவர்களுக்கு குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறது ஸ்டான்லி மருத்துவமனையின் ஆய்வு.
குடல் புண், வயிற்றுப் புண், மாதவிடாய் கோளாறு, பேறுகால பிரச்னைகள் என பல நோய்களுக்கு தீர்வாக பழைய சோறு அமைந்துள்ளது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது உடலுக்கு தேவையான வைட்டமின்களை மீட்டு தர பழைய சோறு முக்கிய பங்காற்றுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் நீர்ச்சோர்வை தடுக்க, செரிமான முறையை சீராக வைத்திருக்க, உடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்க இது பெரிதும் உதவுகிறது. மேலும், பழைய சோறு இரும்புச்சத்து, B6 மற்றும் B12 போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களால் நிறைந்துள்ளது என்பதும் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]