சென்னை: பழைய சோறு தின​மும்  சாப்​பிட்​டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம் என்றும், குறை பிரசவத்தையும்  தவிர்க்​கலாம் என்று அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

குடல் புண், வயிற்றுப் புண், மாதவிடாய் கோளாறு, பேறுகால பிரச்னைகள் என பல நோய்களுக்கு தீர்வாக பழைய சோறு அமைந்துள்ளது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில், இரைப்பை குடல் மற்​றும் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்​றும் வாழ்​வூட்​டும் மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்​சித் துறை சார்​பில் பழைய சோறு குறித்த அறி​வியல் கருத்​தரங்​கம் நடை​பெற்​றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தொடர்ந்​து, கலாநிதி வீரா​சாமி எம்​.பி.​யின் தொகுதி மேம்​பாட்டு நிதி​யில் பல் மருத்​துவ பிரி​வில், புதிய மருத்​துவ உபகரணங்​கள் மற்​றும் புனரமைப்பு பணி​கள் நடை​பெற்​றதை மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வந்​தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர்,  இரைப்பை குடல் மற்​றும் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்​றும் வாழ்​வூட்​டும் மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்​சித் துறை​யில் கடந்த 5 ஆண்​டு​களாக மருத்​து​வர் ஜெஷ்வந்த் தீவிர முயற்​சி​யின் காரண​மாக பழைய சோறு பற்றி பல்​வேறு ஆராய்ச்​சிகளை மேற்​கொண்​டுள்​ளார்.

  • பழைய சோறில் பல்​வேறு சத்​துக்​களும் நல்ல பாக்​டீரி​யாக்​களும் நுண்​சத்​துக்​களும் இருப்பது கண்​டறியப்​பட்​டுள்​ளது.
  • தின​மும் பழைய சோறு சாப்​பிடு​வ​தால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம்.
  • குடலின் நல்ல ஆரோக்​கி​யம் மற்​றும் உடல் பரு​மன் ஏற்​ப​டா​மல் பார்த்​துக் கொள்​ளலாம்.
  • கர்ப்​பிணி​கள் பழைய சோறு சாப்​பிடு​வ​தால் குழந்தை நன்​றாக வளர்​கிறது.
  • குறை பிரசவம், கர்ப்​ப​கால நீரிழி​வு, அதிக உயர் ரத்த அழுத்த நோய் வராமல் பாது​காக்​கிறது.
  • இதய நோயி​லிருந்து காப்​பாற்​றுகிறது. ரத்த கொழுப்பு அளவு​களை குறைக்​கிறது.
  • கல்​லீரலில் உள்ள கெட்​டக் கொழுப்​பு​கள் மற்​றும் ஆபத்​தான அமிலங்​களை கல்​லீரலில் இருந்து வெளி​யேற்ற உதவு​கிறது.
  • அதிக வயிற்​றுப்​போக்கு உள்​ளவர்​களுக்கு குடலில் ஓர் அரணாக இருந்து நுண்​சத்​துக்​கள் மற்​றும் நீர்ச் சத்​துக்​கள் வெளி​யேறாமல் பாது​காக்​கிறது.
  • வயிற்று வலி, மலச்​சிக்​கல், வயிறு வீக்​கம் போன்ற நோய்​களி​லிருந்து குண​மாக உதவு​கிறது.
  • உடல் நலத்​துக்கு பாது​காப்​பான மிகச்​சிறந்த உணவாக பழைய சோறு இருக்​கிறது.

பழைய சோறு தினம் குறித்து முதல்​வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்​கப்​படும்.

இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்த ​நிகழ்ச்​சி​யில் கலாநிதி வீரா​சாமி எம்​.பி., ஐட்​ரீம் இரா.மூர்த்தி எம்​எல்ஏ, சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண்​தம்​பு​ராஜ், மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, அரசு ஸ்டான்லி மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீன் அரவிந்த், மருத்​து​வ​மனை கண்​காணிப்​பாளர் ஜோதி​கு​மார், ஆர்​எம்ஓ வனிதா மலர், குடல் அறுவை சிகிச்சை பிரிவு இயக்​குநர்​ ஜெஸ்​வந்த்​ உள்​ளிட்​ட பலர்​ பங்​கேற்​றனர்​.

சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பழைய சாதம் தொடர்பான ஆராய்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், அதன்மூலம் பயன்பெற்ற பயனாளிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், தமிழக பாரம்பரிய உணவான பழைய சோறினால் மனித உடலில் ஏற்படும் மகத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அந்த ஆய்வில் சர்க்கரை நோய், புற்றுநோய், பேறுகால பாதிப்புகளை தடுக்கும் 200 வகையான நன்மைகள் பழைய சோறு நீரில் இருப்பது ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதயம், சிறுநீரகம், கல்லீரல் நலனைக் காக்கிறது. மொத்தம் 55 நோயாளிகளிடம் பழைய சோறு நீரை வழங்கி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வயிறு சார்ந்த பாதிப்புகள் அவர்களுக்கு குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறது ஸ்டான்லி மருத்துவமனையின் ஆய்வு.

சம்பந்தப்பட்ட அந்த ஆய்வில் சர்க்கரை நோய், புற்றுநோய், பேறுகால பாதிப்புகளை தடுக்கும் 200 வகையான நன்மைகள் பழைய சோறு நீரில் இருப்பது ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதயம், சிறுநீரகம், கல்லீரல் நலனைக் காக்கிறது. மொத்தம் 55 நோயாளிகளிடம் பழைய சோறு நீரை வழங்கி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வயிறு சார்ந்த பாதிப்புகள் அவர்களுக்கு குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறது ஸ்டான்லி மருத்துவமனையின் ஆய்வு.

குடல் புண், வயிற்றுப் புண், மாதவிடாய் கோளாறு, பேறுகால பிரச்னைகள் என பல நோய்களுக்கு தீர்வாக பழைய சோறு அமைந்துள்ளது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது உடலுக்கு தேவையான வைட்டமின்களை மீட்டு தர பழைய சோறு முக்கிய பங்காற்றுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் நீர்ச்சோர்வை தடுக்க, செரிமான முறையை சீராக வைத்திருக்க, உடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்க இது பெரிதும் உதவுகிறது. மேலும், பழைய சோறு இரும்புச்சத்து, B6 மற்றும் B12 போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களால் நிறைந்துள்ளது என்பதும் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]