போர்ட் பிளேர்: அந்தமான் அருகே 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

அந்தமான், நிகோபார் தீவுகளில் இன்று இரவு 7.05 மணிக்கு 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. திக்லிபூர் என்ற இடத்திற்கு தெற்கில் 55 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வு திக்லிபூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. தரைப்பகுயில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் உள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
[youtube-feed feed=1]