சியோல்

தென்கொரியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இன்று காலை சுமார் 7 மணிக்கு தென் கொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இந்நிலநடுக்கம் தென்கொரியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் உணரப்பட்டதாக தெரிய வந்துள்ளது.   இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தென் கொரிய ஊடகங்கள் கூறுகின்றன.

நேற்று முன் தினம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடந்தி உள்ள பியோங்சங் நகரில் இந்த நில நடுக்கம் உணரப்படவில்லை.    எனினும் அங்குள்ள மக்கள் கடும்  பீதியில் ஆழ்ந்துள்ளனர்.