தென்ஸ்

கிரீஸ் நாட்டில் நேற்று 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு கிரீஸ் நாட்டில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.   இது 4.1 ரிக்டர் அளவில்  பதிவாகி உள்ளது.    கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இருந்து சுமார் 29 கீமீ தூரத்தில் கடலுக்கடியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என  கிரிஸ் புவியியக்க நிறுவனம் கூறி உள்ளது.

இந்த நில நடுக்கம் ஏதென்ஸ் நகரின் மத்தியப்  பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   இது குறித்த சேதங்கள் பற்றி எந்த ஒரு தகவலும் இது வரை வெளிவரவில்லை.