ப்புவா நியுகினியா

தீவு நாடான பப்புவா நியுகினியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

கடந்த 1998ஆம் ஆண்டு தீவு நாடான பப்புவா நியுகினியா நாட்டில் கடலுக்கு அடியில் அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் 7 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து சுனாமியால் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தற்போது இன்று அதிகாலை திடீரென அதே பகுதியில் கடலுக்கு அடியில் சுமார் 5.7 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது.  ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.