டில்லி

திடீரென மழை பெய்ததால் டில்லியில் வெப்பம் தணிந்துள்ளது.

கடந்த வாரம் வரை டில்லியில் கடுமையான வெப்பநிலை நிலவியதால் மக்கள் அனல் பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். இன்று மதியம் திடீரென்று மழை பெய்து உள்ளது.  டில்லியில் ஆர்.கே. புரம், லோக் கல்யாண் மார்க் மற்றும் இந்தியா கேட் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது.

எனவே டில்லியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதில் இந்தியா கேட் பகுதியருகே கார், ஆட்டோ மற்றும் ஸ்கூட்டர்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடியே சென்ற காட்சியைக் காண முடிந்தது.

திடீர் மழையால், வானிலை தெளிவற்று காணப்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.  நகரில் வெப்பம் தணிந்து ஓரளவு குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.