போபால்
கனமழை காரணமாக மத்தியப் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது/

இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில், மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3-ந்தேதி (நாளை) மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன மழை காரணமாக சில இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறும், பலவீனமான நிலையில் இருக்கும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel