டில்லி

டில்லியில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் எறும்புகளால் 3 மணி நேரம் தாமதமாகக் கிளம்பி உள்ளது.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல ஏர் இந்தியா விமானம் ஒன்று கிளம்பத் தயாராக இருந்தது.   இந்த விமானத்தில் பூடான் இளவரசர் உள்ளிட்ட பல பயணிகள் பயணம் செய்ய இருந்தனர்.  இந்த விமானம் கிளம்பச் சிறிது நேரமே இருந்த நிலையில் பிசினஸ் வகுப்பில் சரை சாரையாய் இரும்புகள் இருந்தது கண்டறியப்பட்டது.  

விமானத்தைச் சுத்தம் செய்ய பணியாளர்கள் முயன்றும் அது முடியவில்லை. இதையொட்டி மற்றொரு போயிங் 767 பி விமானம் கொண்டு வரப்பட்டு அதில் பயணிகள் மாற்றப்பட்டனர்.  இதனால் விமானம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக அதாவது 5.20 மணிக்குக் கிளம்பி லண்டன் சென்றது.  

இது போன்ற சம்பவங்கள் ஏர் இந்தியாவுக்கு புதியது அல்ல எனப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.  கடந்த மே 27 ஆம் தேதி அன்று அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வவ்வால்கள் பறந்ததால் விமானம் தரை இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.