சென்னை
துபாய் – கொல்கத்தா விமானம் மோசமான வானிலை காரணமாக சென்னையி தரையிறங்கி உள்ளது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று துபாய் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு 274 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. ஆனா; கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவியதால் துபாய் விமானம் அங்கு தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டு இருந்தது.
எனவே அந்த விமானத்தை சென்னையில் தரை இறக்க உத்தரவிடப்பட்டதன்படி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 274 பயணிகளுடன் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்து தரை இறங்கியது.
விமானத்திலேயே பயணிகள் அனைவரும் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டன. வ்மானம் கொல்கத்தாவில் வானிலை சீரடைந்த பிறகு சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றுள்ளது.