புதுடெல்லி:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திரௌபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திரௌபதி முர்மு, 1958 ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி அன்று ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைடாபோசி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிரஞ்சி நாராயண் துடு. இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சந்தால் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்ததுடன்,  2000 ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட்  மாநிலம் உருவானதில் இருந்து ஐந்தாண்டு பதவிக் காலத்தை கவர்னராக பதவி வகித்துள்ளார்.

ஒடிசாவில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிஜு ஜனதா தளம் கூட்டணி அரசாங்கத்தின் போது, அவர், 2000 ஆண்டு மார்ச் 6 முதல் 2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வரை வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மற்றும் 2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6  முதல் மே வரை மீன்வளம் மற்றும் விலங்கு வளங்கள் மேம்பாட்டிற்கான சுயாதீன பொறுப்பான மாநில அமைச்சராக இருந்தார். அவர் முன்னாள் ஒடிசா அமைச்சராகவும், 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ராய்ரங்பூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்பதும், ஒடிசாவிலிருந்து இந்திய மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் பழங்குடியின தலைவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.