சென்னை

சென்னை சோழிங்கநல்லூரில் வாக்களர்களுக்கு பண விநியோகம் செய்த அதிமுகவினரை திமுக தொண்டர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படத்தார்.

வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் திமுக, அதிமுக, மநீம, அமமுக, நாதக என பலமுனை போட்டி நிலவுகிறது.    ஆயினும் திமுக மற்றும் அதிமுக அணிகள் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.

தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல இடங்களில் வாக்காளர்களுக்கு கட்சியினர் பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.  இன்று சென்னை சோழிங்க நல்லூர் தொகுதியில் உள்ள கண்ணகி நகர் 10 ஆம் குறுக்கு தெருவில் இரு அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையொட்டி திமுகவை சேர்ந்த ராஜா என்பவர் அதிமுகவை சேர்ந்த அந்தோணி ராஜ் மற்றும் மாசிலாமணி ஆகிய இருவ்ரையும்  பிடித்து காவல்துறையினரிடம் ஒப்பட்டைத்துள்ளார்.   தேர்தல் அலுவலர் அவர்களிடம் இருந்த பணத்தை கைப்பற்ரி விசாரணை நடத்தி வருகிறார்.