சென்னை: நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, கழக, மக்களவை, மாநிலங்களை  உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.