சென்னை: தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக முன்னிலை பெற்று வெற்றி உறுதியாகி உள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் உள்பட திமுக முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்கள் என பலரும் குழுமியிருந்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இனிப்பு வழங்கி, வெற்றியை கொண்டாடினார்.

இந்த நிலையில்,  இடைத்தேர்தல் வெற்றிக்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல துரைமுருகன் அறிவாலயம் வந்தார், அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை கண்ட,  தி .மு.க. எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான எழிலன் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலுதவி செய்தார்.  அதையடுத்து, துரைமுரகன்  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.