சென்னை

திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது.  இன்று காலை முதலே தூத்துக்குடி தொகுதியில் முன்னிலை வகித்து வந்த தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார். கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கடும் தோல்வியை சந்தித்துள்ளனர்.

வாக்குகள் விவரம் வருமாறு :

கனிமொழி (திமுக) – 4,50,580 (3,23,355 வாக்குகள் முன்னிலை)

சிவசாமி வேலுமணி (அதிமுக) – 1,27,225

ரொவினா ரூத்ஜேன் (நாதக) – 1,04,542

விஜயசீலன் (தமிழ் மாநில காங்கிரஸ்) – 98,342