சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் சுதீஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு குறையாததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel