சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்  என மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் வரும் 20ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் புத்தாடைகள், பொருட்கள் வாங்கவும் வெளியூர் செல்லவும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் புதிய துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்க வணிக நிறுவனங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் முக்கிய கடை வீதிகளில் மக்கள் நெருக்கம் காணப்படுகிறது. இதன் காரணமாக பிக்பாக்கெட், திருட்டு போன்றவைகளும் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமா தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில், கடைகளில் மக்கள் அதிகம் கூடும் தியாகராயர் நகர், புரசைவாக்கம் , பூங்காநகர், பாண்டிபஜார், தாம்பரம் உள்பட மக்கள் அதிகம் கூடும்  இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாண்டிபஜார், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும்,  வண்ணாரப்பேட்டை, பூக்கடை, புரசைவாக்கம், தியாகராயர் நகரில் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.