நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக கடந்த இறுதினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து அவரது ரசிகர்கள் ஆர்த்தி குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்த நிலையில், ஜெயம் ரவியின் இந்த முடிவு தன்னிச்சையான முடிவு என்றும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து தன்னிடம் விவாதிக்கவில்லை என்று ஆர்த்தி ரவி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறான தகவல்கள் வெளியாவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன். தான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லையென்றால் அது உணமையாகி விடும் என்ற காரணத்தாலேயே இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

தவிர, ஜெயம் ரவியை தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தும் அது நடக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர் ஜெயம் ரவியின் இந்த முடிவு மிகவும் வருத்தமளிப்பதாகவும் ஏன் திடீரென இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்பது புரியாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது குழந்தைகளின் எதிர்காலத்தையும் குடும்ப நலன் மட்டுமே தனது முதல் கடமையாக இருப்பதாக தெரிவித்துள்ள ஆர்த்தி ரவி, ஜெயம் ரவியின் இந்த திடீர் முடிவு அவரது சொந்த விருப்பத்தைச் சார்ந்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறியுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து… மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அறிவிப்பு