அமேதி:

அக்டோபர் 4-ம் தேதி அமேதிக்கு வர வேண்டாம் என்று ராகுல்காந்தியை பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி வரும் 4-ம் தேதி தனது நாடாளுமன்ற தொகுதியான உ.பி. மாநிலம் அமேதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம் ராகுல் காந்தியை காணவில்லை என அமேதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘‘இங்கு வர வேண்டாம். எங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது. பயணத்தை ஒத்தி வைக்க வேண்டும்’’ என ராகுல் காந்தியிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், ராகுல் காந்தி திட்டமிட்டப்படி அமேதிக்கு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.