தனுஷ் நடிப்பில் மித்ரன் கே.ஜவஹர் இயக்கும் படம் திருச்சிற்றம்பலம். நான்காவது முறையாக தனுஷ் – மித்ரன் கூட்டணி இணைகிறது. இப்படத்திற்கு தனுஷ்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே நித்யா மேனன் ஒரு கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர் .

திருச்சிற்றம்பலத்தின் படப்பிடிப்பில் முதல் நாயகியாக ராஷி கண்ணா கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்புதளத்தில் வசனத்தை மனப்பாடம் செய்யும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், தனுஷுடன் அவர் இருக்கும் படப்பிடிப்புத்தள புகைப்படம் ஒன்றும் இணையத்தில் கசிந்துள்ளது. முதல்நாளே படப்பிடிப்புத்தள புகைப்படம் கசிந்தது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.