கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போருக்கு இடையில், உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரிடம், அவரின் காதலி கட்டியணைத்து, தன்னை மணம் முடிக்க கோரிக்கை விடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.  பின்னர் இருவரும் மணம் முடித்துக்கொண்டனர்.

போர் சூழலிலும், உக்ரேனியர்களின் காதலை தொடரவே விரும்புகின்றனர். காதலுக்கு கண் இல்லை என்பதும், காதலுக்கு ஒருபோதும் முடிவு கிடையாது என்பதும், இதுபோன்ற நிகழ்வுகளால் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் 13 நாள்களைக் கடந்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் 25 குழந்தைகள் உட்பட 364 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் 759 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர் என்று உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. இநத  போரில் இதுவரை 11,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது. இந்த விஷயத்தில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வந்தாலும், உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடையாது என உக்ரைன் அதிபர் ஜெனலஸ்கி தெரிவித்து உள்ளார். மேலும் ரஷ்ய படைகளை உக்ரைன் படையினர் ஆக்ரோஷமாக எதிர்கொள்கின்றனர். 

இந்த பரபரப்பான போர் சூழலில், உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரை போர் இருந்தபோதிலும், உக்ரைன் சோதனைச் சாவடியில் ஒரு இளம்பெண் பூங்கொத்துடன் வந்து, தனது காதலரான  சிப்பாய்யை கட்டிணயைத்து, தன்னை மணம் செய்துகொள்ளும்படி கோரிக்கை விடுக்கிறார். இதையடுத்து, இருவரும் மணம் செய்து கொள்கின்றனர்.

ராணுவ வீரர்களான வலேரி ஃபைலிமோனோவ் மற்றும் லெசியா இவாஷ்செங்கோ இருவரும்  திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உக்ரேனியர்களின்  காதல் ஒருபோதும் முடிவடையாது என்பதும் காதலுக்கு முடிவு கிடையாது என்பதும், இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் உறுதியாகி உள்ளது.