சென்னை

ன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சர் பொன்முடிக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள் வருமாறு 

சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.  பொன்முடி இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருடைய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

தீர்ப்பினால் பொன்முடியின் தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அவருக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைத்தார். ஆயினும் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.

ஆளுநரின் மறுப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக ஆளுநரின் செயல்பாடு தொடர்பாகச் சரமாரியான கேள்விகளை எழுப்பிய தலைமை நீதிபதி, ஆளுநர் உச்சநீதிமன்ற  உத்தரவை மீறுவதாகக் கண்டனம் தெரிவித்தார்.

இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆளுநர் ஆர் என் ரவி பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பூங்கொத்து வழங்கினார்.

தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற பொன்முடிக்கு  தகவல் தொழில்நுட்பக் கல்வி,  விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் கல்வித்துறை, ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர் கல்வித்துறையை ராஜ கண்ணப்பன் கூடுதலாகக் கவனித்து வந்த நிலையில், பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காந்தியின் வசம் இருந்த கதர், கிராம தொழில்கள் வாரியம், மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்டவை ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது..