சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு பரவல் தீவிரம் அடைந்துள்ளது. அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுவரை 500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மழைக்கால நோய்களும் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக தேங்கிக் கிடக்கு தண்ணீர் காரணமாக டெங்கு கொசு பரவி வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல், குளிர், தலைவலி, வயிற்றுவலி, மூக்கு ஒழுகுதல் வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் பரவி வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் 500 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. மேலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது கொசுக்களை கட்டுப்படுத்த அனைத்து பகுதியிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து வீடுகளுக்கும் பிளீச்சிங் பவுடர் சுமார் 500 கிராம் வழங்கப்படுகிறது. குப்பை கழிவுகளை அகற்றியதும் அந்த இடங்களில் தெளிக்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
மேலும், சுகாதாரத்துறையினர் குடிநீர் வழங்கல்துறையுடன் இணைந்து செயல்படவும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் கலக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதுடன், குடியிருப்பு நலச்சங்கங்களும் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தவறாமல் மருந்து தெளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
சென்னையில் 200 வார்டுகளுக்கும் டெங்கு கட்டுப்படுத்தும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]