டில்லி

முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தியதாக டில்லி காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 

 

 

டில்லி காவல்துறையினர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தியதாகத் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்தனர்.

மேலும் இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் திமுக பிரமுகருமான ஜாபர் சாதிக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  டில்லி காவல்துறை போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கிற்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஆனால் ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளதால் சென்னை மயிலாப்பூர் டொம்மி குப்பம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. அந்த சம்மனில் டில்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.