டில்லி

ற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை  உயரலாம் என டில்லி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமா உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடங்கி உள்ளனர். ஆகவே டில்லி எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.

இதனால் டில்லிக்குக்  காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள் ஆங்காங்கே முடங்கி உள்ளன. ஆகவே டில்லியில் மேற்படி பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பெருவர்த்தகர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

டில்லி நகர மொத்த வர்த்தகர் ஒருவர்,

‘தற்போது வரை டில்லியில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் டில்லிக்குள் வருவதில் சிறிது தாமதம் உள்ளது. இத போராட்டம் நீடித்தால் விலை அதிகரிப்பதைத் தடுக்க முடியாது’

என்று கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தால் டில்லியில் உள்ள வணிக வளாக பகுதிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 75 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது..