டில்லி:
தலைநகர் டில்லியை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் டில்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா, 2018-19 ஆம் ஆண்டிற்கான 53,000 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் தந்திரமான வரவு செலவு திட்டத்தை ஆத்ஆத்மி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ளதாக துணைமுதல்வர் தெரிவித்துளளார்.
மேலும், பட்ஜெட் குறித்து பேசிய துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா, இது ஆம்ஆத்மி அரசின் முதன்முதலான பசுமையான பட்ஜெட் என்று தெரிவித்துள்ள துணைமுதல்வர், நகரத்தில் மாசுக்களை கட்டுப்படுவதில் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்று கூறினார்.
இந்த பட்ஜெட்டில், மாநிலத்தின் சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் நீர் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாகவும், மாநிலத்தின் போக்கு வரத்து, மின்சாரம், சுற்றுச்சூழல், பொதுப்பணித்துறை போன்ற 26 துறைகளுடன் இணைந்து மாசுக்கு எதிராக ஒருகிணைந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் மாநிலம் முழுவதும், நகராட்சி உள்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில்சி சாலைகள் பழுது மற்றும் பராமரிப்பிற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி அரசின் கடந்த ஆண்டு ரூ.44,370 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலை யில், இந்த ஆண்டு 53000 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 19.45 சதவிகிதம் அதிகம்.