டெல்லி: பிசிஆர் பரிசோதனைக் கட்டணங்களை அதிரடியாக குறைத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கட்டணங்களை டெல்லி அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:

டெல்லியில் கொரோனா தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கட்டணங்களை குறைக்க உத்தரவிட்டுள்ளேன். அரசு மருத்துவமனைகளில் இந்த சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. ஆனாலும் தனியார் ஆய்வகங்களில் இந்த சோதனைகளை மேற்கொள்பவர்களுக்கு கட்டண குறைப்பு உதவியாக அமையும் என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது டெல்லியில் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.2,400 கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. அரசின் தற்போதைய உத்தரவுப்படி கட்டணம் ரூ.800 என்று குறைக்கப்பட்டுள்ளது.