டில்லி:

டில்லியில்‘சுஷ்ருட்டா ட்டிராமா சென்டர்’ என்ற சிறப்பு அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த வாரம் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்த மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் அங்கிருந்த ஒரு நோயாளிக்கு வலது காலில் ஆபரேஷன் செய்து பிளேட் பொருத்தியுள்ளார்.

மயக்கத்தில் இருந்த நோயாளிக்கு தலைக்கு பதிலாக காலில் ஆபரேஷன் செய்தது தெரியாமல் போனது. பின்னர் அந்த டாக்டர் தவறுதலாக நோயாளியை மாற்றி ஆபரேஷன் செய்தது நிர்வாகத்துக்கு தெரியவந்தது. உடனடியாக இதற்கு ஆபரேஷனுக்கு மாற்று ஆபரேஷனும் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. பிற டாக்டர்களின் துணை இல்லாமல் அவர் இனி தனியாக ஆபரேஷன் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.